ஏழை, எளிய வறுமையில் வாடும், ஆதரவற்ற, அநாதை, வயதான பெண்கள், விதவைகள், ஆகியோருக்கு மாதந்திர பென்சன் வழங்கப்படுகிறது. எல்லாத்தெருக்களைச் சேர்ந்த 35 பெண்களுக்கு தற்பொழுது ரூ.200 (இருநூறு மட்டும்) வழங்கப்படுகிறது. ஏற்கனவே 50 பேருக்கு வழங்கினோம். ஜக்காத் நிதி குறைந்தாலும், கொடுக்கின்றோம் என வாக்குறுதி தந்தவர்கள் கொடுக்காததாலும் ரூ.300 மாதத்தொகை ரூ.200 ஆக குறைந்திருக்கிறது. 50 நபரிலிருந்து 100 அடுத்தது 150 என எண்ணிக்கையை அதிகரிக்க நினைத்துக்கொண்டிருக்கும், ஜக்காத் நிதி வசூல் குறைந்ததால் இந்த நிலை. நமதூரின் தெருக்களைச் சுற்றிவரும் பொழுது, குடிசைகளைப் போய் பார்க்கும் பொழுது, மிகவும் வேதனையாய் இருக்கிறது. ஏழ்மையை, வறுமையை போக்க, வட்டியைக்குறைக்க, தடுக்க, ஜக்காத் நிதி வசூலைப் பெருக்க வேண்டும். இதற்கு ஆவன செய்யுங்கள். |